Would you like to make this site your homepage? It's fast and easy...
Yes, Please make this my home page!
thavaseelan
;; ,Jgrpa ,y;yj;jhf;fj;jpdhy; Neubahf
eilngWfpd;wJ grpa ,y;yj;jhf;fk; fhuzkh G+Nfhsj;jpd; KOntg;gKk; $LfpwJ ,r;nraw;ghNl
G+Nfhs ntg;gkhFjy; vdg;gLk; ,t; G+Nfhs ntg;gkhFjy; eltbf;iffspy; khdpl ,aw;if
eltbf;iffSk; ghhpa nry;thf;Fr;nrYj;Jfpd;wJ gRik tPl;LthAl;fspy;
CO2 ,CFCS Fwpg;gplj;jf;f
thAl;fshFk;
G+Nfhsj;jpid
ntg;gkhf;Fk; khdpleltbf;iffs;
njhopw;rhiyfspy; caph;r;Rtl;L vhpnghUs;
ghtid
fhLfs; vhpf;fg;gLjy;
mjpfhpj;j Nka;r;ry;
tptrhaf;fopTfis vhpj;jy;
mjpfhpj;j ,urhadg;gad;ghLfs;
G+Nfhsj;jpid
ntg;gkhf;Fk; ,aw;ifeltbf;iffs;
vhpkiy ntbg;G
fhl;Lj;jP guTjy;
,d;W Gtpapy; ruhrhp
tUlhh;e;j ntg;gepiy 30
F----80
F
tiuf; $Lfpd;wJ ,d;Dk; 100 Mz;Lfspy;
KidTg;gpuNjr gdp KOJk; cUFk; epiyf;F G+kpapd; ntg;gk; mjpfhpj;J tUtjhf $wg;gLfpd;wJ
jw;nghJ 30 tPjkh gdp cUfptpl;ljhfTk; 4wg;gLfpd;wJ
G+Nfhsj;jpid
ntg;gk; fhuzkhf Vw;gLk; tpisTfs;
1-kz;zpy; ,Ue;J mjpfsT ePh;
MtpahFjy; eilngWk; ,jdgy; ePhpay; tl;lk; fly Nghd;wtw;wpy; khw;wj;jpid Vw;gLj;Jk;
2-thOk; mq;fpapd nehjpa
njhopw;ghl;bd; ghjpg;gpdhy; RthrKk; xspj;njhFg;Gk; ghjpg;GWk; cf;Fk; tPjk; $Lk;
3-Gw;wiufSk; ghiytdq;fSk;
mjpfhpg;gNjhL caph;g;Gkpf;f fhLfs; fUfpf;nfhz;L ,Wjpahf fhl;Lj;jP gutha;g;Gz;L
G+Nfhsk; ntg;gkhFk;
nraw;ghl;bidf;fl;Lg;gLj;j Fwpg;ghf jw;Nghija epiyaapy; #hpa rf;jpg;ghtid
epyntg;gghtid fhw;whbg;ghtid Nghd;wtw;wpw;F murhq;fkhdJ khdpak; mspj;jy;
Fwpg;gplj;jf;fJ
|
|
|
|
|
|
|
நாம்
வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகம்
தினந்தோறும் சூடேறிக் கொண்டிருக்கிறது என்றால் வியப்பாக இருக்கும். உலகம்
சூடேறுகிறது என்றால் உலகத்தின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து
கொண்டே செல்வது
ஆகும். இயற்கை
காரணிகளாலோ,
மனிதன்
செயல்பாடுகளாலோ உலகம் சூடேறுகிறது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார்
500
கிலோமீட்டர் வரை வளிமண்டலம்
வியாபித்துள்ளது. இம் மண்டலத்தில் பல்வேறு வகையான வாயுக்கள் உள்ளன. நாம்
வாழும்
பூமியில் உள்ள
வளிமண்டலம் எப்போதும் சூரியனிலிருந்து குறிப்பிட்ட வெப்பநிலையைத்
தக்க
வைத்துக்கொண்டு மீதமுள்ள வெப்பத்தை அகச்சிவப்பு கதிர்களின் வடிவில்
வெளியேற்றி
விடும். இவ்
விளைவிற்கு பெயர்தான் பசுங்கூட விளைவு (
Green house effect)
ஆகும்.
இவ்வாறு குறிப்பிட்ட வெப்பநிலையைத் தக்கவைக்காவிடில் உலகம்
உறைந்து விடும். சூரியனிலிருந்து வளிமண்டலத்திற்கு நுழையும் வெப்பத்தில்
70%
கிரகிக்கப்படுகிறது. மீதமுள்ள
30%
அகச்
சிவப்புக் கதிர்களாக மீண்டும் வளியை விட்டு
விண்வெளிக்கே செல்கிறது. நாம் வாழ்வதற்கு ஓரளவு மிதமான வளிமண்டல வெப்ப
சமநிலையைப்
பாதுகாப்பது
இவ்வாயுக்களே.
ஆனால்
தற்போது வளிமண்டலத்திலிருந்து
விண்வெளிக்குத் திரும்பிச் செல்லும் வெப்பநிலையின் அளவு குறைந்து
பசுங்கூட
வாயுக்கள்
அந்த வெப்பத்தை மேலும் தேக்கிக் கொள்கின்றன. இதனால் வெப்ப சம நிலை
பாதிக்கப்பட்டு வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் தற்போது
பல்வேறு
இயற்கை
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. கடந்த நூறு ஆண்டுகளில் கடல் மட்டத்தின்
சராசரி
அளவு 10 - 20
செ.மீ. அளவு
உயர்ந்துள்ளது. அடுத்த நூறு ஆண்டுகளில் மேலும்
9 - 80
செ.மீ. அளவு
உயரும் என்று கணித்துள்ளனர். அலாஸ்காவில் உள்ள பனிப்பாறைகள்
தொடர்ந்து உருகிக் கொண்டேயிருக்கின்றன. சட்லெஜ் ஆற்றின் குறுக்கே
கட்டப்பட்டிருக்கும் பக்ரா அணைக்கட்டு எப்போதுமே நிரம்பி வழிந்து
கொண்டிருக்கிறது.
ஆர்க்டிக்
கடல் பகுதியில் பனிப் பாறைகளின் தடிமன்
29
சதத்திற்கு
மேலாகக்
குறைந்துவிட்டது.
1953-க்குப்
பிறகு எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள கும்பு பனிப்பாறைகள்
5
கி.மீ. நீளத்திற்கு உருகியுள்ளன. இச் செயல்களால் கடல் மட்டம் தொடர்ந்து
உயர்ந்து
கொண்டே
செல்கிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள சில தீவுகள்,
இந்தியப் பெருங்கடலில்
உள்ள
மாலத்தீவின் பல பகுதிகள்,
மொரீஷியஸ்
தீவின் சில பகுதிகள் நீரில் மூழ்கும்
அபாயத்தில் உள்ளன. பிஜி நாட்டின் கடற்கரை ஆண்டுதோறும் ஓர் அடி அளவு
குறைந்து கொண்டே
வருகிறது.
அண்டார்டிகாவில்
33
சதம்
பென்குயின் பறவைகளின் எண்ணிக்கை
குறைந்தும்,
தென்
அமெரிக்கக் காடுகளில் இருந்து
20
வகைக்கும் மேற்பட்ட தவளை மற்றும்
தலைப்பிரட்டை இனங்கள் அழிந்தும் உள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகின்
சிறந்த
பவளப் பாறைகள்
25%-க்கும்
மேலாக அழிந்துள்ளன.
1990
முதல்
2002
வரை உள்ள
ஆண்டுகளில் 1998, 2001
மற்றும்
2002
ஆகிய மூன்று
ஆண்டுகள்,
கடந்த
143
ஆண்டுகளில்
அதிக அளவு
ஆண்டு சராசரி
வெப்பநிலையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த
நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வளிமண்டலம் தொடர்ந்து வெப்பமடைந்து கொண்டே
செல்வதுதான்
காரணம்.
வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால் நீர்ச் சுழற்சியில் மாறுபாடு,
வறட்சி
மற்றும் புயல் போன்ற பருவநிலை மாற்ற நிகழ்வுகள் ஏற்பட்டுக்
கொண்டிருக்கின்றன.
வெப்பநிலையினால் பரவக்கூடிய நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
நீர்த்தேக்கங்களில் உப்பு நீர் கலப்பதால் குடிநீர் நிலைகள் பயனற்றதாகி
விடுகின்றன.
குளிர்காலம்
குறைந்து கோடை காலம் நீண்டு கொண்டே செல்லவும் வாய்ப்பு உள்ளது. தற்போது
உலகின்
600
கோடி
மக்கள்தொகையில்
200
கோடிக்கும்
அதிகமானவர்கள் கடற்கரையின்
100
கி.மீ.
தொலைவிற்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். புயல்களாலும்,
பெரும்
வெள்ளத்தாலும் கடலின் மட்டம் உயர்வதால் கடற்கரையோர மக்கள்
பாதிப்படைகின்றனர்.
பசுங்கூட வாயுக்கள் எவ்வாறு வெப்பத்தை அதிகரிக்கின்றன?
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுவான கார்பன் - டை - ஆக்ûஸடு
கடந்த நூறு
ஆண்டுகளில்
27%
அதிகரித்துள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் அதிகத் தொழில்
செயல்களால் இவ்வாயு வெளியாகிறது. இவ் வாயுவிற்கு அடுத்தபடியாக மீத்தேன்
வாயு,
வளிமண்டல
சூடேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில் மீத்தேன்
அளவு
145%
உயர்ந்துள்ளது. பசுங்கூட விளைவில்
10
- 20%
மீத்தேன் பங்கு உள்ளது
குறிப்பிடத்தக்கது. தொழிற்சாலைகளிலிருந்தும்,
நெல்வயல்களிலிருந்தும்,
நிலக்கரி
சுரங்கங்களிலிருந்தும் மீத்தேன் வாயு அதிக அளவில் உண்டாகிறது.
வளியின்
வெப்பநிலை
உயர்வால் பாதிப்புகள் பல இருந்தாலும்,
நன்மைகள் சிலவும் உள்ளது. வளியில்
கார்பன் - டை - ஆக்ûஸடின்
அளவு அதிகரிப்பதால் தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை
நன்கு
நடைபெறுவதால் உற்பத்தி பெருகும். கூடுதல் மழைப்பொழிவு சில சமயங்களில்
ஏற்படுவதால் வேளாண்மைக்குப் பயனளிக்கிறது. ஆயினும் வளிமண்டல வெப்ப
உயர்வால்
நன்மைகளைவிட
தீய விளைவுகளே அதிகம்.
இதனால்
பசுங்கூட வாயுக்களைக்
கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வு உலக நாடுகள் அனைத்திற்கும் தோன்ற
ஆரம்பித்துள்ளது. நம் இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு
வருகிறது.
1987
கியாட்டோ
மாநாட்டு (Kyoto
Protocol)
ஒப்பந்தத்தின்படி,
ஒவ்வொரு
நாடும் தாம் வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவைக் குறைத்துக் கொள்ள
வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
1990
ஆண்டு எந்த
அளவு பசுங்கூட வாயுக்களின்
அளவு
இருந்ததோ அந்த அளவே
2000ம்
ஆண்டிலும் வெளியிட வேண்டும் என்று
1992-ல்
ரியோ -
டி -
ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டில்(Earth
Summit)முடிவு
செய்யப்பட்டது.
மாநாடுகள்,
அவற்றின்
தீர்மானங்கள்
மட்டுமே
பிரச்சினைகளைத் தீர்க்காது. அரசாங்கம் தனிப்பட்ட கவனம் செலுத்தினால்தான்
பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். மாசுபடும் செயல்பாடுகளைக் குறைத்துக்
கொள்ள
வேண்டும்.
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டையும் மனத்தில் கொள்ள வேண்டும். அதிக அளவில்
மரங்களை நட வேண்டும். இயற்கை வளங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்தி,
உற்பத்தித்
திறனை
அதிகப்படுத்த வேண்டும். மக்களுக்கு சுற்றுசூழல் பற்றிய கல்வியை அளிக்க
வேண்டும். பசுங்கூட வாயுக்களின் அளவுகளைத் துல்லியமாக அறிய தொழில்நுட்பம்
வளர
வேண்டும்.
மீண்டும் புதுப்பிக்கக்கூடிய,
குறைந்த
மாசுபாடுடன் அதிக ஆற்றல் கொண்ட
மூலங்களான சூரிய சக்தி,
காற்றாலை,
நில
வாயு போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்த அரசு
முன்வர
வேண்டும். பொருளாதாரக் கொள்கைகள் சுற்றுப்புறச் சூழலை மனத்தில் கொண்டு
இயற்றப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் எரிபொருள்களை எரிக்கும்போது ஏராளமான
மாசுபொருள்கள் வெளியாவதைத் தடுக்க புதுமையான தொழில்நுட்பங்களைக் கொணர,
தொழில்நுட்ப
வல்லுநர்கள்
ஊக்குவிக்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகள் தொழில் புரட்சிக்குப்
பின்னர் தொழில் வளர்ச்சியால் நன்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றன. உலகில்
கார்பன் -
டை - ஆக்ûஸடு
வெளியாகும் நாடுகளின் சதவீதத்தைக் கணக்கிட்டால் அமெரிக்க ஐக்கிய
நாடுகள்தான் அதிகம் வெளியிடுகிறது.
உலகின்
மற்ற நாடுகளுக்கு யோசனைகளையும்,
சட்ட
திட்டங்களையும் அறிவிக்கும் அமெரிக்கா,
மாசுப்பொருட்களைக் குறைக்க வேண்டும்
என்று
கூறும் கியாட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத செயல் ஊருக்கு மட்டும்தான்
உபதேசம்,
தனக்கு அல்ல
என்பதை குறிப்பதாக உள்ளது.
இன்றைய
சேமிப்பு தான்
நாளைய
தேவைக்குப் பயனளிக்கும். அதுபோல நம் சுற்றுச்சூழலை இன்று நாம் பேணிக்
காத்தால்தான் நாளை நம் சந்ததியினருக்கு அது பயனளிக்கும் என்பதில்
ஐயமில்லை.
|
|
|
|
thanu